Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிய விளையாட்டு போட்டி: தமிழக வீரரின் பதக்கம் பறிப்பு

Webdunia
திங்கள், 27 ஆகஸ்ட் 2018 (07:43 IST)
இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாக ஆசிய விளையாட்டு போட்டி நடந்து வரும் நிலையில் இந்த போட்டியில் இந்தியா இதுவரை  7 தங்கம்,  10 வெள்ளி,  19 வெண்கலம் என மொத்தம் 36 பதக்கங்கள் பெற்று புள்ளி பட்டியலில் 9 இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்திலும் ஜப்பான், கொரியா, ஈரான் இந்தோனேசியா ஆகிய நாடுகள் அடுத்த நான்கு இடங்களிலும் உள்ளது.
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற ஆடவருக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீரர் கோவிந்தன் லக்‌ஷ்மனன் மிக அபாரமாக ஓடி வெண்கல பதக்கம் வென்றார்.. ஆனால் பதக்கம் பெற்ற சில் நிமிடங்களில் அவரது பதக்கம் பறிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.  கோவிந்தன் லக்‌ஷ்மனன் தனக்கான வெள்ளை கோட்டை தாண்டி ஓடியதாக கூறி அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் அவரது வெண்கல பதக்கம் பறிபோனது.
 
இதனையடுத்து 4வது இடம் பிடித்த சீனாவின் ஜோ சாங்க்ஹாங் வெண்கலம் வென்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கு வெண்கல பதக்கம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் கோவிந்தன் லக்‌ஷ்மணன் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா தடகள சம்மேளனம் மேல் முறையீடு செய்துள்ளது. இதுகுறித்த விசாரணை விரைவில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது ஆஸ்திரேலியா.. ஆப்கன் அணி வரலாற்று சாதனை

திருப்புமுனையாக அமைந்த அந்த டைவ்… ரிஷப் பண்ட் செய்த தவறை சரி செய்த அக்ஸர் படேல்!

என்ன இப்படி ஆவேசமாயிட்டாரு… ரிஷப் பண்ட்டின் அலட்சியத்தால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ரோஹித் ஷர்மா!

பரபரப்பாக செல்லும் பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான் போட்டி… அரையிறுதிக்கு செல்ல மூன்று அணிகளுக்குமே வாய்ப்பு!

சதத்தைப் பற்றி நினைக்கவேயில்லை… 92 ரன்களில் அவுட் ஆனது குறித்து ரோஹித் ஷர்மாவின் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments