அம்பாத்தி ராயுடு vs விஜய் சங்கர் – கோஹ்லி யார் பக்கம் ?

Webdunia
சனி, 20 ஏப்ரல் 2019 (09:16 IST)
உலகக்கோப்பையில் அம்பாத்தி ராயுடு மற்றும் விஜய சங்கர் இடையிலான தேர்வு பிரச்சனையில் அணித் தலைவர் விராட் கோஹ்லி பதில் அளித்துள்ளார்.

உலகக்கோப்பைக்கான இந்திய அணி ஏப்ரல் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக அம்பாத்தி ராயுடு இடம்பெறவில்லை.  அவருக்குப் பதிலாக தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். இந்த தேர்வு குறித்து இந்திய அணித் தேர்வாளர் எம்.எஸ்.கே. பிரசாத்திடம் கேள்வி எழுப்பியபோது ‘விஜய் சங்கர் ஒரு 3டி பிளெயர். அதனால்தான் அவரை தேர்வு செய்தோம்’ எனக் கூறினார். இதற்கு எதிர்வினை ஆற்றும் விதமாக அம்பாத்தி ராயுடு டிவிட்டரில்’ உலகக்கோப்பையைக் காண இப்போதுதான் 3 டி கண்ணாடி வாங்கியிருக்கிறேன்’ எனத் தெரிவித்திருந்தார்.

இதனால் இணைய உலகில் விஜய் சங்கர் vs அம்பாத்தி ராயுடு என மோதல்கள் உருவாகின. இருவருக்கும் ஆதரவாகவும் எதிராகவும் ரசிகர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டது குறித்து பதில் அளித்துள்ளார். அதில் ‘ அணித்தேர்வுக்காக சில வீரர்களைப் பரிசோதித்தோம். ஆனால் விஜய் சங்கர் வந்தவுடன் அணி 3டி ஆகிவிட்டது. அவர் பேட் செய்வார், பவுலிங் போடுவார். நன்றாக பீல்டிங்கும் செய்வார். மற்ற அணிகள் அணியின் சமனிலையில் கவனம் செலுத்தும்போது ஏன் நாமும் அவ்வாறு செயல்படக் கூடாது?.. ஆனால் அவர் எந்த இடத்தில் இறங்குவார் என்பது பின்னர்தான் தெரியவரும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை அனுப்பலாமா? பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு..!

மூன்று ஃபார்மட்டுகளிலும் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர்.. பும்ராவுக்கு குவியும் வாழ்த்துக்கள்..!

தென்னாபிரிக்காவுக்கு எதிரான முதல் டி20 போட்டி.. 102 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி..!

தென்னாப்பிரிக்கா அணிக்கு திரும்பும் டேவிட் மில்லர்.. இந்திய அணியில் சுப்மன் கில்- ஹர்திக்.. இன்று முதல் டி20 போட்டி..!

உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் கிரிக்கெட் வீரர்களுக்கு மரியாதை கிடைக்காது: அஸ்வின்

அடுத்த கட்டுரையில்
Show comments