Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ பாரா ஒலிம்பிக்: மாரியப்பனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து!

Webdunia
வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (20:28 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றன என்பதும் இந்த ஒலிம்பிக் போட்டியில் ஒரு தங்கம் உள்பட இந்தியா 7 பதக்கங்களை வென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அதே டோக்கியோவில் தற்போது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது இதனை அடுத்து இந்தியாவில் இருந்து கலந்துகொள்ள இருக்கும் இந்திய வீரர்களின் அணி இன்று நோக்கிப் புறப்படுகிறது 
 
இந்திய அணியை தலைமையேற்று நடத்தி செல்பவர் நமது தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் உலகநாயகன் நடிகருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:
 
டோக்கியோவில் நடக்கவிருக்கும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு இந்திய வீரர்களின் அணி பயணப்படுகிறது. அவ்வணியின் தலைவராகக் கொடியேந்திச்செல்லவிருப்பவர் நம் மாரியப்பன் தங்கவேலு. பெருமையோடு வாழ்த்திவிட்டுக் காத்திருப்போம்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments