Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது இன்னிங்ஸிலும் பம்மிய பங்களாதேஷ் – மூன்றாவது நாளே முடியும் போட்டி ?

Webdunia
சனி, 16 நவம்பர் 2019 (15:35 IST)
இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி மூன்றாவது நாளிலேயே முடிய இருக்கிறது.

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிராக நேற்று தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணித் தலைவர் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் இந்தியா மயங்க் அகர்வாலின் இரட்டை சதத்தால் 493 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதையடுத்து இன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்ஸைப் போலவே இந்திய பவுலர்களிடம் சரண் அடைந்தது. அந்த அணியின் முஷ்கிபூர் ரஹ்மானைத் தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இப்போது பங்களாதேஷ் 213 ரன்களை சேர்த்து 9 விக்கெட்களை இழந்துள்ளது. இன்னும் ஒரு விக்கெட்டை இந்தியா கைப்பற்றினால் இந்த போட்டியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் மூன்றாவது நாளிலேயே முடிக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments