Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டி: 3 விக்கெட்டுக்களை இழந்து இந்தியா திணறல்

Webdunia
வியாழன், 6 டிசம்பர் 2018 (06:40 IST)
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வரும் இந்திய அணி சமீபத்தில் முடிவடைந்த டி-20 போட்டி தொடரை 1-1 என்ற கணக்கில் டிரா செய்த நிலையில் இன்று முதல் அடிலெய்டில் முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோஹ்லி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். கே.எல்.ராகுல் மற்றும் முரளிவிஜய் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சிதரும் வகையில் கே.எல்.ராகுல் இரண்டாவது ஓவரிலேயே ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து முரளிவிஜய் மற்றும் கேப்டன் விராத் கோஹ்லி ஆகியோர்களும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி சற்றுமுன் வரை 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 27 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஹாசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

நானும் தோனியும் இணைந்து விளையாடுவது கடைசி முறையாக இருக்கலாம்… மனம் நெகிழ்ந்த கோலி!

ஐபிஎல் போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடை..! என்ன காரணம் தெரியுமா.?

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

அடுத்த கட்டுரையில்
Show comments