Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 பந்துகளில் 4 விக்கெட்: இந்தியா அபார வெற்றி!

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (13:05 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே உலக கோப்பை டி20 பயிற்சி போட்டி இன்று நடந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்திருந்தது. சூர்யகுமார் யாதவ் 50 ரன்களும் கேஎல் ராகுல் 57 ரன்கள் எடுத்திருந்தனர்.
 
இந்த நிலையில் 187 என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 
ஆஸ்திரேலியா அணி 19 ஓவர் முடிவில் 176 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வெற்றி பெற 11 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்தது. ஆனால் முகமது ஷமி கடைசி ஓவரில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் மட்டும் RCB அணிக்கு சென்றால்…? –ஏபி டிவில்லியர்ஸின் ஆசை!

தொடக்க ஆட்டக்காரர்களாக புதிய ஜோடி… சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு!

வங்கதேச டி 20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments