Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா vs தென் ஆப்பிரிக்கா - கேப்டனாக ரிஷப் பண்ட் வெற்றியை சுவைப்பாரா?

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (08:08 IST)
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. 

 
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நிலையில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. ஆம், இந்தியா - தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டி கொண்ட டி20 தொடர் இன்று முதல் தொடங்க உள்ளது. 
 
இதனிடையே தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடரிலிருந்து இந்திய அணியின் கே.எல்.ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விளக்கியதால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இந்திய அணி கேப்டனாக ரிஷப் பண்ட், துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
 
டெல்லியில் இரவு நடைபெறும் முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்திய அணியை பொறுத்தவரை ரிஷப் பண்ட், ருத்ராஜ், ஸ்ரேயாஸ் அய்யர், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ் குமார் போன்ற பலம் வாய்ந்த வீரர்கள் இருக்கின்றனர். 
 
அதேபோல் தென் ஆப்பிரிக்க அணியில் குவின்டன் டி காக், டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ரபடா  உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். இன்று நடைபெறும் முதல் டி20 போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற தீவிர முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments