சிஎஸ்கே அணிக்கு டெல்லி கொடுத்த டார்கெட்.. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா?

Mahendran
சனி, 5 ஏப்ரல் 2025 (17:24 IST)
இன்று சிஎஸ்கே மற்றும் டெல்லி அணிகளுக்கிடையிலான ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் எடுத்துள்ளது. 
 
கே.எல். ராகுல் அபாரமாக விளையாடி 77 ரன்கள் அடித்தார். அவர் ஆறு பவுண்டரிகளும் மூன்று சிக்ஸர்களையும் விளாசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிதாக ஆடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  
 
சிஎஸ்கே பௌலிங் பொருத்தவரையில் கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா, நூர் அகமது பதிரன்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டே எடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில், 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் சிஎஸ்கே அணி பேட்டிங் செய்ய உள்ளது. இன்றைய போட்டியில் கான்வே களம் இறக்கப்பட்டுள்ளதால், அவர் ஒப்பனிங் பேட்ஸ்மேனாக ரச்சின் உடன் களமிறங்குவார். அதனையடுத்து ருதுராஜ், விஜய் சங்கர், ஜடேஜா, தோனி உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் இருப்பதால், இந்த இலக்கை எட்டி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments