என்னுடைய மாதவிடாய் தேதியை தேர்வாளர் கேட்டார்.. கிரிக்கெட் வீராங்கனை பகீர் புகார்..

Siva
வெள்ளி, 7 நவம்பர் 2025 (17:10 IST)
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீராங்கனை ஜஹானாரா ஆலம், முன்னாள் தேர்வாளர் மன்ஜூருல் இஸ்லாம் மீது பாலியல் தொல்லை புகார்களை பகிரங்கமாக தெரிவித்துள்ளார். 
 
2022 உலகக் கோப்பையின்போது தனக்கு அநாகரிகமான அழைப்புகள் வந்ததாகவும், அவற்றை ஏற்க மறுத்ததால், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு மன்ஜூருல் தடுப்பாக இருந்ததாகவும் ஜஹானாரா குற்றம் சாட்டியுள்ளார்.
 
தன் மீதான தொந்தரவுகள் குறித்து பலமுறை புகார் அளித்தும், பெண்கள் குழு தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி உட்பட பல பிசிபி அதிகாரிகள் புறக்கணித்ததாக அவர் தெரிவித்தார். மன்ஜூருல் வீராங்கனைகளுடன் நெருங்கி பழகுவது, மாதவிடாய் தேதி குறித்து அநாகரிகமாக கேட்பது போன்ற சம்பவங்களையும் ஜஹானாரா விவரித்தார்.
 
எனினும், மன்ஜூருல் இந்த குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை என்று மறுத்துள்ளார். இந்த விவகாரம் மிகவும் தீவிரமானது என்று கூறியுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் தேவைப்பட்டால் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜடேஜா சம்மதித்தால் மட்டுமே அணி மாற்றப்படுவார்: ஐபிஎல் 2026 புதிய விதிகள்..!

உள்ளூர் போட்டிகளில் விளையாடவுள்ள ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!

ஆஹா எல்லா சிம்டம்ஸும் கரெக்டா இருக்கே… ஜட்டுவுடன் செல்ஃபி எடுத்துப் பகிர்ந்த ஜெய்ஸ்வால்!

இரண்டாவது திருமணத்தை உறுதி செய்த ரஷித் கான்.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி..!

இந்திய ஏ அணியில் ராகுல் டிராவிட் மகனுக்கு இடம்.. முத்தரப்பு தொடரில் அறிமுகம்..!

அடுத்த கட்டுரையில்