Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

ப்ரீ ஹிட் போல ப்ரீ பால் இருக்க வேண்டும் – அஸ்வின் கோரிக்கை!

Advertiesment
அஸ்வின்
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (07:58 IST)
மன்கட் முறையில் ஜோஸ் பட்லரை அவுட் செய்து சர்ச்சையில் சிக்கிய அஸ்வின் இப்போது அதுகுறித்து விளக்கமாக பேசியுள்ளார்.

கடந்த ஆண்டு நடந்த 12 ஆவது ஐபிஎல் போட்டி தொடரின் போது ஜோஸ் பட்லரை அஸ்வின் மன்கட் முறையில் அவுட் ஆக்கியது கூறப்படுகிறது. மன்கட் முறையில் பேட்ஸ்மேனை எச்சரிக்காமல் முதல் முறையே அவுட் ஆக்கியது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இதையடுத்து அஸ்வின் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளிக்கும் விதமாக அஸ்வின் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அதில் ‘நான் செய்ததில் என்ன தவறு இருக்கிறது. நான் கிரிக்கெட்டில் உள்ள விதிமுறைகளின்படிதான் செயல்பட்டேன், 'மன்கட் 'அவுட் செய்தேன். பேட்ஸ்மேன்கள்தான் எப்போதும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஒரு பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கப்பட்ட முழுமையான உரிமைகளின் அடிப்படையில்தான் பட்லரை நான் ஆட்டமிழக்கச் செய்தேன். இதில் எந்தவிதமான வாக்குவாதத்துக்கும் இடமில்லை. இதில் கிரிக்கெட் ஸ்பிரிட் கொல்லப்பட்டது எப்படி எனக்குத் தெரியவில்லை’ எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்போது டெல்லி அணிக்காக விளையாட உள்ளார் அஸ்வின். டெல்லி அணியின் பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங் இது குறித்து நான் அஸ்வினிடம் விவாதிக்க உள்ளேன். அவரிடம் முதல் விஷயமாக இதைதான் பேசப்போகிறேன் எனக் கூறியுள்ளார். ஆனால் அவரின் கோரிக்கையை அஸ்வின் ஏற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய அஸ்வின் ’பாண்டிங்கிடம் இதுகுறித்து தொலைபேசியில் பேசினேன். அவர் துபாய் வந்ததும் இதுகுறித்து விவாதித்து பேச உள்ளேன். இந்த முறை பேட்ஸ்மேன்களுக்கு ப்ரீபால் இருப்பது போல, பவுலர்களுக்கு ப்ரீஹிட் கொடுக்கவேண்டும். பந்துவீசுவதற்கு முன்னர் நான் ஸ்ட்ரைக்கில் இருக்கும் பேட்ஸ்மேன் கிரிஸை தாண்டினால் 5 ரன்கள் குறைக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மழையால் தப்பித்த பாகிஸ்தான்: டிராவில் முடிந்ததால் இங்கிலாந்து ஏமாற்றம்