Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா - இலங்கை 3வது ஒருநாள் போட்டி: மழை காரணமாக ஓவர்கள் குறைப்பு

Webdunia
வெள்ளி, 23 ஜூலை 2021 (18:54 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங் தேர்வு செய்த நிலையில் இந்திய அணி களத்தில் இறங்கி விளையாடி வருகிறது. இந்த நிலையில் இந்திய அணி 23 ஓவர்கள் விளையாடி முடித்த நிலையில் திடீரென மழை பெய்தது. இதன் காரணமாக தற்போது 47 ஓவர் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சற்று முன் வரை இந்திய அணி 28 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பிரதிவ்ஷா 49 ரன்களும் சஞ்சுஜான்சன் 46 ரன்களும் எடுத்து அவுட் ஆகியுள்ள நிலையில் தற்போது சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடி வருகின்றனர் 
 
இந்திய அணி இந்த போட்டியில் வென்றால் 3-0 என்ற கணக்கில் இலங்கை அணியை ஒயிட்வஷ் செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குருவைப் பெருமைப்பட வைத்த மாணவன் அபிஷேக் ஷர்மா!

இனி அவரைப் போன்ற வீரர்களுக்குதான் அதிகம் ஆதரவு தரப்போகிறோம்.. கம்பீர் கருத்து!

நான் வியந்த மிகச்சிறந்த பேட்டிங் அபிஷேக் ஷர்மாவுடையதுதான்… ஜோஸ் பட்லர் ஆச்சர்யம்!

உலக சாம்பியன் குகேஷை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா.. குவியும் வாழ்த்துக்கள்..!

இந்திய அணியை டாஸின் போது கேலி செய்து ஊமைக்குத்து குத்திய ஜோஸ் பட்லர்!

அடுத்த கட்டுரையில்
Show comments