Webdunia - Bharat's app for daily news and videos

Install App

190 இலக்கை நோக்கி விளையாடி வரும் ஐதராபாத்: 3 விக்கெட்டுக்களை இழந்ததால் சிக்கல்

Webdunia
ஞாயிறு, 8 நவம்பர் 2020 (22:02 IST)
190 இலக்கை நோக்கி விளையாடி வரும் ஐதராபாத்:
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய முக்கிய போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது அந்த அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்து உள்ளது
 
அனைத்துப் போட்டிகளிலும் மிக அபாரமாக விளையாடி வரும் தவான் இன்றைய போட்டியில் 50 பந்துகளில் 78 ரன்கள் அடித்தார். ஹெட்மையர் கடைசி நேரத்தில் இறங்கி 22 பந்துகளில் 42 ரன்கள் அடித்தார். தொடக்க ஆட்டக்காரர் ஸ்டோனிஸ் மிக அபாரமாக விளையாடி 38 ரன்களும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 21 ரன்கள் எடுத்தார்
 
பந்துவீச்சை பொறுத்தவரை சந்தீப் சர்மா, ஹோல்டர் மற்றும் ரஷித் கான் ஆகிய மூவரும் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் 190 என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் ஹைதராபாத் அணி சற்று முன் வரை 5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்து உள்ளனர். கேப்டன் வார்னர் 2 ரன்களில் ரபடா பந்தில் போல்ட் ஆனதால் அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அதேபோல் மணிஷ்பாண்டேவும் 21 ரன்களிலும், கார்க் 17 ர்ன்களிலும் அவுட் ஆனார்கள். இதனால் ஐதராபாத் அணி தத்தளித்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments