Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : தனுசு

ச‌னி‌ப் பெய‌ர்‌ச்‌சி ரா‌சி பல‌ன் : தனுசு
, செவ்வாய், 20 டிசம்பர் 2011 (19:19 IST)
வித்தியாசம் பார்க்காமல் எல்லோர்க்கும் உதவுபவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உத்‌தியோகத்தில் பிரச்னைகளையும், புதிய முயற்சிகளில் தடைகளையும் தந்த சனிபகவான் இப்போது 21.12.2011 முதல் 16.12.2014 வரை உள்ள காலக்கட்டங்களில் லாப வீட்டில் அமர்வதால் இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். இதுவரை எந்த வேலையை எடுத்தாலும் முழு மன நிறைவுடன் முடிக்க விடாமல் தடுத்தாரே! உழைப்பு உங்களிடத்தில் இருந்து, உயர்வு மற்றொருவருக்குப் போனதே! பணம், காசு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி அடுத்தடுத்து செலவுகளும் துரத்தியதே! வேலைப்பளுவால் எல்லோரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசி கெட்ட பெயர் எடுத்தீர்களே! நிரந்தரமாக எதிலும் வருமானம் கிடைக்காமல் தவித்தீர்களே! இப்படிப்பட்ட தொல்லைகளெல்லாம் இனி நீங்கும்.

குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் வரும். எதிலும் ஆர்வம் பிறக்கும். பணவரவுக்கு பஞ்சமிருக்காது. சேமிக்க வேண்டுமென்ற எண்ணமும் வரும். பெரிய பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள். கணவன்-மனைவி இருவரும் கலந்துப் பேசி குடும்பச் செலவுகளை குறைக்க முடிவுகளெடுப்பீர்கள். பூர்வீக சொத்தை மாற்றி உங்கள் ரசனைக் கேற்ப புது வீடு வாங்குவீர்கள். குழந்தை பாக்‌கியம் கிடைக்கும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். மகனுக்கு அயல்நாட்டில் உயர்கல்வி அமையும். பழைய கடன் பிரச்னைகள் தீரும். மனைவிவழியில் மதிப்பு, மரியாதை கூடும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக் கண்டு வலிய வந்துப் பேசுவார்கள். பழுதான ஃப்ரிட்ஜ், மைக்ரோ ஓவனை மாற்றுவீர்கள்.

இயக்கம், சங்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். வாய்தா வாங்கித் தள்ளிப்போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். பழைய நகைகளை மாற்றி புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள். சகோதர‌ர்களுடன் மனம் விட்டு‌ப் பேசுவீர்கள். உத்‌தியோகத்தில் வேலைச்சுமை குறையும். நண்பர்கள், உறவினர்கள் உதவியுடன் புதுத் தொழில் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். தாய்வழி விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். அத்தை, மாமன் வழியில் இருந்த பிணக்குகள் நீங்கும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு. சனிபகவான் வக்ரமாகி 26.3.2012 முதல் 11.9.2012 வரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால் இக்காலக்கட்டத்தில் உத்‌‌தியோகத்தில் வேலைச்சுமை, மறைமுக அவமானம், ஏமாற்றம் வந்துச் செல்லும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-விரையாதிபதியுமான செவ்வாய் பகவானின் சித்திரை நட்சத்திரத்தில் 21.12.2011 முதல் 8.11.2012 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் குழந்தை பாக்‌கியம் கிடைக்கும். பிள்ளைகளால் மதிப்பு கூடும். பூர்வீக சொத்து கைக்கு வரும். சகோதரிக்கு வேலை கிடைக்கும். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வி.ஐ.பி.கள் நண்பர்களாவார்கள். உங்களை எதிரியாக நினைத்த பலர், இனி உங்களின் நல்ல மனசைப் புரிந்து கொண்டு நட்பு பாராட்டுவார்கள். பாதிபணம் தந்து முடிக்காமல் இருந்த சொத்தை மீதிப் பணம் தந்து பத்திரப் பதிவு செய்வீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. என்றாலும் 4.2.2012 முதல் 22.6.2012 வரை சித்திரை நட்சத்திரத்திலேயே சனிபகவான் வக்ரமடைவதால் பிள்ளைகளால் அலைச்சலும், உறவினர்களுடன் மனத்தாங்கலும் வந்து நீங்கும்.

9.11.2012 முதல் 11.12.2013 வரை மற்றும் 19.5.2014 முதல் 10.9.2014 வரை ராகுபகவானின் சுவாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். வேற்றுமதத்தவர், மாநிலத்தவர்கள் அறிமுகமாவார்கள். வீட்டில் குடி நீர், கழிவு நீர் பிரச்சனைகள் தீரும். உங்களை ஏமாற்றியவர்களை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.

12.12.2013 முதல் 18.5.2014 வரை மற்றும் 11.9.2014 முதல் 16.12.2014 வரை உங்கள் ராசிநாதனும்-சுகாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலக் கட்டங்களில் தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடும். வி.ஐ.பி.கள் உதவுவார்கள். ஷேர் பணம் தரும். அரசாங்கத்தால் இருந்த நெருக்கடிகள் நீங்கும். தங்க நகைகள் வாங்குவீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பெரிய நோய் இருப்பதைப் போன்ற அச்சம் விலகும்.

சனிபகவான் ராசியைப் பார்ப்பதால் டென்ஷன், அலர்ஜி வந்து நீங்கும். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். செறிமானக் கோளாறு, நரம்புக் கோளாறு வந்து நீங்கும். சனிபகவான் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் பிள்ளைகளின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சில நாட்களில் தூக்கமில்லாமல் போகும். படிப்பு, உத்‌தியோகத்தின் பொருட்டு பிள்ளைகளை பிரிய வேண்டி வரும். பூர்வீக சொத்துப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சனிபகவான் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேசுவதை தவிர்ப்பது நல்லது.

வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமார்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். புது வாடிக்கையாளர்களும் அறிமுகமாவார்கள். அயல்நாடு தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். இடவசதியின்றி தவித்துக் கொண்டிருந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.

உத்‌தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். உங்களை குறை சொல்லிக் கொண்டிருந்த சக ஊழியர்கள் இனி மதிப்பார்கள். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! நீண்ட நாள் கனவுகள் நனவாகும். கண்ணுக்கு அழகான கணவர் வந்தமைவார். நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். பெற்றோரின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். மாணவ-மாணவியர்களே! மதிப்பெண் உயரும். வகுப்பாசிரியர் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். விளையாட்டில் பதக்கம் வெல்வீர்கள். கலைஞர்களே! புதிய நிறுவனங்கள் உங்களை அழைத்துப் பேசும். சம்பளப் பாக்கி கைக்கு வரும்.

இந்த சனி மாற்றம் வாழ்க்கையில் வசந்தத்தை ஏற்படுத்துவதுடன் புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைக்கும்.

பரிகாரம்:
திருநெல்வேலிக்கு அருகிலுள்ள ஸ்ரீவைகுண்டம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகைலாய நாதர் சன்னதியில் வீற்றிருக்கும் ஸ்ரீசனீஸ்வர பகவானை அஸ்தம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil