Religion Astrology Specialpredictions 0804 02 1080402055_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீனம்:

Advertiesment
மீனம்:
, செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (20:40 IST)
webdunia photoWD
புதுமையாக சிந்திக்கும் மனமும், பூப்போல புன்னகை பூக்கும் முகபாவங்களும், எடுத்த காரியத்தை எப்படியாவது முடித்துவிடும் அபார சக்தியும், ஊரே ஒரு குடையின் கீழ் எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் போராடி வெற்றிபெறும் வேங்கைகளே!

இதுவரை உங்களின் ராசிக்கு பனிரெண்டில் ராகுவும், ஆறாம் வீட்டில் கேதுவும் அமர்ந்து கொண்டு கொஞ்சம் அலைக்கழித்தாலும் ஓரளவு நன்மை செய்தார்கள். இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு பன்னிரெண்டில் அமர்ந்து கொண்டு உங்களை ஆட்டிப்படைத்த ராகு இப்பொழுது 9. 4. 2008 முதல் 29. 10. 2009 முடிய உங்கள் ராசிக்கு லாப வீட்டிற்கு வருவதால் வாழ்வில் திடீர் திருப்பங்களையும், பணப்புழக்கத்தையும் கொடுப்பதுடன் விரையச் செலவுகளையும் குறைப்பார். குடும்பத்தில் இனி மகிழ்ச்சி தங்கும். உங்கள் வார்த்தையை அனைவரும் மதிப்பார்கள். சாப்பிடக்கூட முடியாமல் வேலை, வேலை என்று ஓடிக்கொண்டிருந்தீர்களே! அந்த நிலை மாறும். கணவன் - மனைவிக்குள் நிலவிய சண்டை சச்சரவுகள், சந்தேகங்கள் தீரும். அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை இல்லாத தம்பதியர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கடன்காரர்களைக் கண்டு அஞ்சி ஒதுங்கினீர்களே! பெரிய கடனில் ஒரு பகுதியை இனி பைசல் செய்வீர்கள்.

9. 4. 2008 முதல் 10. 6. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் எதிலும் வெற்றியே கிட்டும். பிள்ளைகளின் பிடிவாத குணம் இனி மாறும். உயர் கல்வியில் வெற்றி பெறுவார்கள். உங்கள் மகளுக்கு பலவரன்கள் வந்தும் கல்யாணம் முடியவில்லையே என அவ்வப்போது வருந்தினீர்களே, இனி நல்ல இடத்தில் திருமணம் முடியும். மகனின் அடிமனதில் இருக்கும் தனித் திறமைகளைக் கண்டுபிடித்து உற்சாகப்படுத்துவீர்கள். பெற்றோருடன், உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள், மனக் கசப்புகள் நீங்கும். நண்பர்கள், உறவினர்களில் சிலர் எதிரியாக மாறி, ஏகப்பட்ட தொல்லைகள் தந்தார்களே! அவர்களெல்லாம் இனி பணிந்து வருவார்கள். வெளிநாட்டுப் பயணம் நல்ல விதத்தில் அமையும். உங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு தராமல் ஏமாற்றியவர்களிடமிருந்து பணம் கைக்கு வரும்.

11. 6. 2008 முதல் 21. 4. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். வருங்காலத் திட்டம் ஒன்று நிறைவேறும். பிரபலங்களால் பாராட்டப்படுவீர்கள். அவர்களின் நட்பை பயன்படுத்தி பல காரியங்களை சாதித்துக் காட்டுவீர்கள். கன்னிப் பெண்களுக்குத் தடைப்பட்ட திருமணம் கூடி வரும். உயர் கல்வியில் நாட்டமில்லாமல் இருந்தீர்களே, இனி வெற்றி பெற்று, நல்ல வேலையில் சென்று அமர்வீர்கள். சந்தர்ப்ப சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல், சமயோஜித புத்தியுடன் இனி செயல்படுவீர்கள். மாணவ, மாணவிகளின் நெடுநாள் கனவுகள் நனவாக உற்சாகத்துடன் படிப்பார்கள். மந்தம், மறதி விலகும். கெட்ட நண்பர்களிடமிருந்து விலகுவார்கள்.

வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் அளவிற்கு பொருளாதார வசதியின்றி தவித்தீர்களே, இனி கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் தேடி வரும். அனுபவம் மிகுந்த நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் மோதல் போக்கு, சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் எல்லாம் மாறும். உங்களின் திறமைகள் வெளிப்படும்.

கேதுவின் பலன்கள் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல்...

கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்திருந்த கேது பகவா‌ன், இப்பொழுது உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணியாதிபதி வீடான ஐந்தாம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். ஆன்மீகத்தில் நாட்டத்தை அதிகப்படுத்துவார். 16. 12. 2008 முதல் 25. 8. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் எதிலும் வெற்றியே கிட்டும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவார்கள். குடும்பத்திலும் அமைதியும், மகிழ்ச்சியும் தங்கும். அரசாங்கத்தாலும், அரசியல்வாதிகளாலும் இருந்து வந்த நெருக்கடிகள் நீங்கும். சேமித்து வைத்த பணத்தில் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். வீண் அலைச்சலாலும், திடீர்ப் பயணங்களாலும் தூக்கமின்றி தவித்தீர்களே, உடல் உஷ்ணம் அதிகமாகி அடிவயிற்றில் வலி வந்து அவஸ்தைப்பட்டீர்களே, இனி வாடிய முகம் மலரும். கலைத்துறையினர் உற்சாகத்துடன் காணப்படுவார்கள்.

26. 8. 2009 முதல் 27. 10. 2009 வரை தடைபட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடையே நிலவிவந்த தொடர் யுத்தமெல்லாம் மாறும். உங்கள் வார்த்தையை, ஆலோசனையை ஏற்பார்கள். அரசால் இருந்த நெருக்கடி நீங்கும். கம்ப்யூட்டர், செல்போன் வகைகளால் லாபம் அதிகரிக்கும். ஏற்றுமதி இறக்குமதி வகைகளாலும் ஆதாயம் வரும். உத்யோகத்தில் வெகு நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள் உயர்வு எல்லாம் இனி உங்கள் சீட்டைத் தேடி வரும். கணினி துறையிலிருப்பவர்களுக்கு புது சலுகைகள் கிடைக்கும்.

பரிகாரம்:

திருத்தணிக்கு அருகிலுள்ள திருவலங்காட்டில் வீற்றிருக்கும் வண்டார் குழவியம்மை உடனுறை வடரண்யேஸ்வரரை தரிசித்து வணங்குங்கள்.

Share this Story:

Follow Webdunia tamil