Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விருச்சிகம்:

விருச்சிகம்:
, செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (19:52 IST)
webdunia photoWD
மற்றவர்களை சிரிக்க வைப்பதிலும், சிந்திக்க வைப்பதிலும் வல்லவர்கள். மனிதாபிமானமும், மனசுக்குப் பிடித்தவர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் தாராளமும், நெருக்கடியான நேரத்திலும் நேர்மை தவறாத பண்பும், தொடர்‌ந்து முயன்று இலக்கை எட்டிப்பிடிக்கும் குணமும் கொண்டவர்களே!

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் வீட்டில் ராகுவும், பத்தாமிடத்தில் கேதுவும் இருந்துகொண்டு உங்களுக்கு மனநிறைவைத் தந்தார்கள் அல்லவா, இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களுக்கு என்ன தரப்போகிறார் என்பதை அறிவோம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் இடத்தில் அமர்ந்துக் கொண்டு உங்கள் நிம்மதியை குலைத்தார். தாயாருடன் வாக்குவாதங்களையும், உடல்நலத்தில் அதிக தொந்தரவுகளையும் தந்து மனக்கவலையை ஏற்படுத்திய அம்மாவின் முகம் மலரும். மகிழ்ச்சியில் திகைப்பார்கள். சுப நிகழ்ச்சிகளை இனி சிறப்பாக நடத்துவீர்கள். இதுவரை சோகச் செய்திகளை கேட்ட நீங்கள் இனி காதிற்கு இனிமையான செய்திகளை கேட்பீர்கள். தடைப்பட்ட காரியங்களை எல்லாம் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தினர் உங்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்படுவார்கள். கணவன்- மனைவிக்குள் அன்யோன்யம் உண்டாகும். வீண் வாக்குவாதங்கள் நீங்கும்.

9. 4. 2008 முதல் 10. 6. 2008 முடிய உள்ள காலகட்டங்களில் எதிலும் வெற்றியை தருவார். அரைகுறையாக நின்றுபோன பல வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்துவீர்கள். வீட்டிற்கு தேவையான சாதனங்களை வாங்குவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மகளுக்கு நீங்கள் எதிர்பார்த்த படி நல்ல வரன் வந்தமையும். இதுவரை சுடுசுடு என்றே இருந்திருப்பீர்கள். இனி பிரியமானவர்களிடம் சந்தோஷமாக பேசி மகிழ்வீர்கள். அடிக்கடி தொந்தரவுக் கொடுத்து வந்த பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். தாய்வழி உறவினர்களால் இருந்து வந்த அலைச்சல்களும், செலவுகளும் நீங்கும். வங்கிக் கடன் பெற்று அழகான காற்றோட்டமான வீட்டை கட்டி முடிப்பீர்கள். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். நண்பர்களின் உதவிக் கிடைக்கும். கன்னிப் பெண்கள் நல்லது எது? கெட்டது எது? என தெரிந்து புத்தி சாதுர்யத்துடன் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் சவால்களில் வெற்றிப் பெறுவீர்கள். ஷேர், புரோக்ரேஜ் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் மறைமுகமாக எதிர்ப்பவர்களை வெல்வீர்கள். கறாராகப் பேசி பாக்கிகளை வசூலிப்பீர்கள். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். கடையை விரிவுப்படுத்துவீர்கள். பழைய வேலையாட்களை நீக்கி விட்டு புதிய வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். புதிய ஏஜென்சிகளுடன் ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் நம்பிக்கைக்குரியவராக நடந்துக் கொள்வீர்கள். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண்பீர்கள். மாணவர்களுக்கு அதிகாலையில் எழுந்து படிப்பது நல்லது. ஆசிரியர்களின் அன்பை பெறுவீர்கள்.

கேதுவின் பலன்கள் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல்


கேதுவின் பலன்கள்:

இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்து ஒரு வேலையையும் முழுமையாக செய்ய விடாமல் அலைகழித்த கேது இப்போது ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்தமர்கிறார்.

உங்களை ஏளனமாகவும், இழிவாகவும் திட்டியவர்கள் எல்லாம் இனி உங்களைப் பாராட்டுவார்கள். முன்பெல்லாம் குடும்பத்தில் கவனம் செலுத்தாது பொறுப்பின்றி அலைந்து திரிந்த நீங்கள். இனி குடும்பத்திற்காகவே உழைப்பீர்கள். 26. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்களில் உங்களின் செல்வாக்கு உயரும். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக அமையும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த உறவினர்கள் உங்களின் நிலைமையை புரிந்துக் கொள்வார்கள். தந்தையின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தந்தை வழி சொத்துக்களால் அலைச்சல்களும், செலவுகளும் ஏற்படும். பத்திரங்களை கவனமாக கையாளப்பாருங்கள். வேலையின்றி திரிந்தவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும்.

உத்யோகத்தில் அதிகாரிகளால் ஏற்பட்ட சில மனக்கசப்புகள் விலகும். திறமைகள் வெளிப்படும். நீங்கள் விரும்பிய இடத்திற்கே மாற்றம் கிடைக்கும். அலுவலகத்தில் சக ஊழியர்கள உங்களை அவமானப்படுத்தி பேசினார்களே, அந்த நிலை மாறும். உங்களின் ஆலோசனையைக் கேட்பார்கள். புதிய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சிக்கனமாக செலவு செய்து சேமிக்கத் தொடங்குவீர்கள்.

பரிகாரம்:

கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரத்தில் வீற்றிருக்கும் குன்றமுலைநாயகி உடனுறை சண்பகாரணியேசுரரை அங்குள்ள நாகத்தீர்த்தம் சூரிய புஷ்கரணியில் நீராடி, நெய் தீபம் ஏற்றி வணங்குங்கள்.


Share this Story:

Follow Webdunia tamil