Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிம்மம்:

சிம்மம்:
, செவ்வாய், 8 ஏப்ரல் 2008 (20:21 IST)
webdunia photoWD
ஒரு அடி அடித்தாலும் பட்டுக்கொள்ளலாம். ஆனால் தரக்குறைவாக ஒரே ஒரு வார்த்தை சொல்லிவிட்டால் தாங்கிக்கொள்ளாத நீங்கள், தன்மானச் சிங்கங்கள்.

இதுவரை உங்களுக்குத் தடுமாற்றங்களையும், அவமானங்களையும் கொடுத்துவந்த ராகு, கேது இப்பொழுது 9. 4. 2008 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலகட்டங்ககளில் உங்களுக்கு என்ன செய்யப்போகிறார்கள் என்பதனை பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்கள் ராசிக்கு ஏழாவது வீட்டில் நின்று கொண்டு உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினரிடையே ஏகப்பட்ட குழப்பங்களையும், வீண் வாக்குவாதங்களையும் ஏற்படுத்திக் கொண்டிருந்த ராகு இப்போது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் ஆற்றலுடன் வந்தமர்கிறார்.

9. 4. 2008 முதல் 10. 6. 2008 முடிய உள்ள காலகட்டத்தில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண வரவு உண்டு. சில பிரச்சனைகளால் எதிரியைப் போல் பார்த்த குடும்பத்தினர்கள் இனி பாசத்துடன் நடந்துக் கொள்வார்கள். கணவன் வழி உறவினர்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தீரும். சந்தேகத்தினால் பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். வழக்குகள் சாதகமாகும். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்ற நினைத்தவர்கள் கடனை வட்டியுடன் திருப்பித் தருவார்கள். பால்ய நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. பழைய கடனை அடைப்பீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த நினைப்பீர்கள். நட்பு வட்டம் விரியும். பழைய நகைகளை மாற்றி புதிய ஆபரணங்களை வாங்குவீர்கள்.

புதிய வீடு, மனை வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அனுசரித்துப் போவீர்கள். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் வலிய வந்துப் பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வி. ஐ. பி.க்களுக்கு நெருக்கமாவீர்கள். வாகன வசதிப் பெருகும். 11. 6. 2008 முதல் 21. 4. 2009 உள்ள காலக்கட்டங்களில் கொஞ்சம் கவனமாக இருக்கப்பாருங்கள். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து முடிவெடுங்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வுத் தேடி வரும். உத்யோகம் இல்லாமல் அலைந்துத் திரிந்தவர்களுக்கு அவர்களின் படிப்பிற்கு தகுந்த வேலைக் கிடைக்கும். வேற்று மதத்தவரின் நட்புக் கிடைக்கும். அக்கம் பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை நீங்கும். நாக தோஷத்தை ஏற்படுத்திய ராகு மாங்கல்ய ஸ்தானத்தை விட்டு விலகுவதால் திருமணமாகாத கன்னிப் பெண்களுக்கு உடனே திருமணம் கைக்கூடும்.

22. 4. 2009 முதல் 27. 10. 2009 முடிய உள்ள காலக் கட்டங்களில் வியாபாரத்தில் அதிரடியான திருப்பங்கள் நிகழும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். வேலையாட்களின் வருமானத்தை உயர்த்துவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களின் ஆலோசனைகளுக்கு ஒத்துழைப்பார்கள். வெளிநாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வீர்கள்.

உத்யோகத்தில் அதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். தூக்கி எரிந்துப் பேசிய சக ஊழியர்கள் இனி உங்களைப் பாராட்டுவார்கள். அதிகாரிகளின் ஒத்துழைப்புக் கிடைக்கும்.

கேதுவின் பலன்கள் அடு‌த்த ப‌க்க‌த்‌தி‌ல்...


கேதுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசியிலேயே அமர்ந்து தலைச் சுற்றல், நெஞ்சு வலி, மனக் குழப்பங்களை தந்த ராகு இப்போது பன்னிரெண்டில் சென்று அமர்கிறார்.

9. 4. 2008 முதல் 15. 12. 2008 முடிய உள்ள காலக்கட்டங்களில் தடைபட்ட காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். இதுவரை வேடிக்கையாகப் பேசி வந்த நீங்கள் இனி விவேகமாகவும் நடந்துக் கொள்வீர்கள். பேச்சில் முதிர்ச்சித் தெரியும். சின்ன சின்ன வலிகளை எல்லாம் ஏதேனும் பெரிய நோய்களின் தாக்கம் இருக்குமோ என அச்சப்பட்டீர்களே! இனி அந்த பயம் விலகும். இனி ஆரோக்கியம், இளமை, அழகு கூடும். மகிழ்ச்சியில் திகைப்பீர்கள்.

16. 12. 2008 முதல் 25. 8. 2009 உள்ள காலகட்டங்களில் அவசர முடிவுகளை தவிர்க்கப்பாருங்கள். முன்கோபம், வீண் பகை வரக்கூடும். வாகனப் பழுது நீங்கும். முக்கிய புண்ணிய தலங்களுக்குச் சென்று வருவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். 26. 8. 2009 முதல் 27. 10. 2009 வரை புது முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். அவர்களின் தேவையறிந்து உதவுவீர்கள். மகனுக்கு திருமணப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். பால்ய நண்பர்களின் சந்திப்பினால் மகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களின் படிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் பரிசையும், பாராட்டையும் பெருவீர்கள். கன்னிப் பெண்களுக்கு கற்பனைத்திறன் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வெற்றிக் கிட்டும்.

பரிகாரம்:

விருத்தாசலத்திற்கு தெற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவில் நாகேந்திரப்பட்டினம் எனும் ஊரில் எழுந்தருளியுள்ள நீலமலர்க்கண்ணியம்மை உடனுறை நீலகண்ட நாயகேச்சுரரை வணங்குங்கள்.


Share this Story:

Follow Webdunia tamil