கர்நாடக அரசியல் நிலை! தேர்தல் நடத்தப்பட்டால் யாருக்கு வெற்றி கிட்டும்?
ஜோதிட ரத்னா க.ப. வித்யாதரன்
Publish Date: Fri, 23 Nov 2007 (12:29 IST)
Updated Date: Fri, 23 Nov 2007 (12:29 IST)
ஜோதிடத்தின் பார்வையில் கர்நாடகம் மாநிலம் ராகுவின் பார்வையில் உள்ளதாகும். கருநாடகம் என்ற சொல்லில் உள்ள `ட'வை எடுத்துவிட்டால் கருநாகம் என்று வரும். ஜோதிடத்தில் கருநாகத்தை ராகுவிற்கும், செந்நாகத்தை கேதுவிற்கும் சொல்வது மரபு.
ராகு என்றாலே பாம்பு. மேடு, பள்ளம் உடையது. கர்நாடகத்தில் நில அமைப்பு ஏறக்குறைய இப்படித்தான் உள்ளது. தொடர்ந்து 3 வருடங்களாக சனியின் பார்வையில் ராகு இருப்பதால் அங்கு நிலையற்ற தன்மை அரசியலில் நிலவுகிறது.
அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 09ம் தேதி ராகு, சனியின் பார்வையை விட்டு விலகுவதால் அங்கு தேர்தல் நடக்கும். அரசியல் ஸ்திரத்தன்மை உண்டாகும். அதுவரை குழப்பம் நீடிக்கும். பழி வாங்குதல், வன்முறை அதிகரிக்கும்.