Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படத்தை பாத்துட்டு துணிவுடன் கொள்ளையடிக்க வந்தேன்! – வங்கி கொள்ளையன் வாக்குமூலம்!

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (12:13 IST)
திண்டுக்கலில் படம் ஒன்றை பார்த்துவிட்டு பட்டப்பகலில் வங்கியில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கலில் உள்ள தாடிக்கோம்பு சாலையில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இங்கு பகல்வேளையில் நுழைந்த நபர் ஒருவர் அங்கிருந்த வங்கி ஊழியர்களை மிரட்டி கட்டுப்போட்டு, மிளகாய் ஸ்ப்ரே உள்ளிட்டவற்றை அடித்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் வங்கியை சுற்றி வளைத்து கொள்ளையனை பிடித்தனர். பட்டப்பகலில் வங்கியில் தனிநபராக ஒருவன் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ: மாநிலங்களவைக்கே செல்லாத இளையராஜா! குளிர்கால கூட்டத்தொடர் விவரம்!

அந்த நபரை பிடித்து விசாரித்ததில் அவர் திண்டுக்கல்லை சேர்ந்த கலீல் ரகுமான் என்றும், சமீபத்தில் வெளியான ஒரு திரைப்படத்தை பார்த்துவிட்டு கொள்ளை சம்பவம் நடத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments