Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் நிதியுதவி திட்டம் தொடக்கம்: கவர்னர் பெருமிதம்

Webdunia
செவ்வாய், 24 ஜனவரி 2023 (12:07 IST)
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் புதுச்சேரியில் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. 
 
புதுவைகவர்னர் தமிழிசை கலந்து சௌந்தரராஜன் அவர்கள் இதனை தொடங்கி வைத்து ’குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பணம் திட்டத்தை தொடங்கி வைத்ததில் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார்
 
பெண்கள் கையில் பணம் இருந்தால் தான் அது சுயநலத்திற்காக அல்லாமல் குடும்பத்திற்காக பொதுநலத்திற்காக பயன்பெறும் என்பதை உணர்ந்த இந்த திட்டத்தை தொடங்கி உள்ளோம் என்றும் அவர் கூறியுள்ளார் 
 
புதுச்சேரியில் இந்த திட்டம் குறித்த அறிவிப்பே இல்லாமல் தொடங்கி உள்ளோம் என்றும் ஆனால் இந்த திட்டத்தை அறிவித்த ஒரு சிலர் இன்னும் தொடங்காமல் இருக்கின்றார்கள் என்றும் அவர் கூறினார். 
 
புதுச்சேரியில் சுமார் 71 ஆயிரம் குடும்பத்தலைவிகள் மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெருபவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

100 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்த உயிரினம்! மீண்டும் வந்த அதிசயம்!

சிறையில் இருந்ததால் செய்தித்தாள் படிக்கவில்லை போலும்.. செந்தில் பாலாஜிக்கு ஜெயக்குமார் பதிலடி..

2வது விமானத்தில் வந்த இந்தியர்களுக்கும் கைவிலங்கு: அதிர்ச்சி தகவல்..!

ஓடும் ரயிலில் இருந்து கிழே விழுந்த பயணி.. செல்போன் சிக்னலை வைத்து கண்டுபிடித்த போலீசார்..!

அத்தை, சித்தி, பெரியம்மாவிடம் தவறாக நடக்க முயற்சி.. கடைசியில் ஏற்பட்ட பரிதாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments