Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தண்ணீர் குடிக்கும் போது பல்லை விழுங்கிய பெண்… உயிரிழந்த சோகம்!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (11:12 IST)
சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் பல் வயிற்றுக்குள் சென்றதால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வளசரவாக்கத்தை அடுத்த ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி ராஜலட்சுமி. இவர் சில தினங்களுக்கு முன்னர் பல் மருத்துவமனையில் புதிதாக 3 பற்கள் செயற்கையாகக் கட்டிக்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தண்ணீர் குடிக்கும் போது அதில் இருந்த ஒரு பல் கழண்டு வயிற்றுக்குள் சென்றுள்ளது.

இதனால் அவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளாகவே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments