Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 5 April 2025
webdunia

திங்கள் முதல் ஊரடங்கு... யார் அந்த எதிர்கட்சி தலைவர்? விடை கிடைக்குமா...

Advertiesment
தமிழகம்
, சனி, 8 மே 2021 (09:43 IST)
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக முடிவு எடுப்பதில் தாமதமாகுமா என அச்சம். 

 
எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதிமுக சார்பில் எதிர்க்கட்சி தலைவர் தேர்வு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாகத் தகவல் வெளியாகிறது. ஆம், அதிமுக நிர்வாகிகள் இடையே நீண்ட நேரம் விவாதம் நீடித்த நிலையில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. 
 
அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முடிவு ஏதும் எட்டப்படாததால் வரும் 10 ஆம் தேதிக்கு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதாவது, திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ஆனால், தமிழகத்தில் மே 24 வரை, அதாவது மே 10 ஆம் தேதி முதல் (வரும் திங்கட்கிழமை) மே 24 தேதி வரை முழு ஊரடங்கு அமலபடுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, மே 10 ஆம் தேதி காலை 4 மணி முதல் 24 ஆம் தேதி காலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்பதால் அதிமுக கூட்டம் நடைபெறுமா எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்விக்கு விடை கிடைக்குமா என கேள்விகள் எழுந்துள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் கனமழை