Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர் வீட்டில் பையன், வெளிநாட்டில் கணவன்: கள்ளக்காதல் விபரீதம்

Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2018 (19:52 IST)
விழுப்புரம் அருகே கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவியை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 
 
விழுப்புரம் மாவட்டம் பக்கிரிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். இவர் சபீனா பானுவை 2005 ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு குழந்தையில்லை. அதோடு ஜாகிர் உசேன் வெளிநாட்டில் பணிபுரிபவர். 
 
இதனால், எதிர் வீட்டில் வசித்து வந்த டிரைவர் யுவராஜூடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார் சபீனா பானு. இந்த விவகாரம் ஊர் மக்களுக்கு தெரிந்து, சபீனா பானுவின் கணவர் வெளிநாட்டில் இருந்து வந்த போது இதை பெற்றி கூறியுள்ளனர்.
 
இதனால், மனைவியை கண்டித்துள்ளார் ஜாகீர். இருப்பினும் கள்ளக்காதலை விடுவதற்கு சபீனா தயாராக இல்லை. இதனால் கணவம் மனைவிக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் நடைபெற்று வந்தது. 
 
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சபீனா கணவன் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தினார். ஜாகீரின் அலறல் சத்தம் கேட்டு உதவ வந்த அக்கம் பக்கத்தினர் போலீஸாருக்கும் தகவல் கொடுத்தனர். 
 
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஜாகீரின் வாக்குமூலத்தை ஆதாரமகா வைத்து சபீனாவையும் அவரளது கள்ளக்காதலனையும் போலீஸார் கைது செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments