Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுனர் தன்னுடைய உரையில் தவிர்த்த வார்த்தைகள் என்ன? வெளியான விவரம்!

Webdunia
திங்கள், 9 ஜனவரி 2023 (15:21 IST)
இன்று சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் தமிழ் நாடு, திராவிட நாடு போன்ற வார்த்தைகளை ஆளுநர் வாசிக்காமல் புறக்கணித்தார். இதனை அடுத்து பெரும் சர்ச்சை எழுந்தது. ஆளுனர் வாசித்த உரை தமிழக அரசால் எழுதித் தரப்பட்ட உரை. அது பற்றி முன்னரே ஆளுனரிடம் ஒப்புதல் பெற்ற பிறகே அதைக் கொடுத்ததாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

இந்நிலையில் தமிழக அரசு கொடுத்த உரையில் ஆளுனர் வாசிக்காமல் விட்ட வரிகள் மற்றும் வார்த்தைகள் பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

அதில் ‘தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர்’ ஆகிய பெயர்களை வாசிக்காமல் விட்டுள்ளார். மேலும் “சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், பகுத்தறிவு’ ஆகியவற்றையும் அவர் வாசிக்கவில்லை.

மேலும் ‘மிழ்நாடு அரசு என்ற வார்த்தையை இந்த அரசு’ என மாற்றி வாசித்துள்ளார். மேலும் தமிழக அரசு பற்றிய வாக்கியத்தில் ‘சமூகநீதி உள்ளிட்ட கொள்கைகளைக் கொண்ட மிகச்சிறந்த ஆட்சி முறை’ என்பதைப் படிக்காமல் தவிர்த்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments