Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தானங்களில் நம்ம தமிழகம் தான் முதலிடம் : விஜய பாஸ்கர் பெருமிதம்

Webdunia
செவ்வாய், 22 ஜனவரி 2019 (18:31 IST)
அண்மைக் காலமாக இறப்பு மற்றும் விபத்துகளின் போது மூளைச்சாவு அடைபவர்களின்  உறுப்புகள் தானமாக பெறுவது குறித்த விழிப்புணர்வு கிராமத்திலும், நகரத்திலும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இரத்த தானம், உடலுறுப்புதானம் கண் தானம் என அனைத்திலும் தமிழகம் நம் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  கூறியுள்ளார்.
 
திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
 
'தாய் திட்டம் என்ற பெயரில் உருவாக்கப்பட்ட விபத்து காய சிகிச்சை மையங்கள் பொது மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. அதனால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது இவ்வாறு கூறினார். 
 
மேலும் இந்த திட்டத்தை வலுப்படுத்த ரூ.130 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் இதனால் இறப்பு விகிதம் குறையும் எனவும், ரத்ததானம், கண் தானம், உடலுறுப்பு தானம் என அனைத்திலும் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்த அவர் கண் தானத்தின் மூலம் தேவைக்கு அதிகமான கண்கள் உள்ளதாகவும், தானம் பெறுபவர்களுக்கான காத்திருப்பில் யாரும் இல்லை'  என்று  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் தமிழகம் முழுவதும் வெப்பம் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

18 படிகளில் ஏறியதும் ஐயப்ப தரிசனம்: சோதனை முறையில் அமல்படுத்த திட்டம்..

முன்பதிவு இல்லா பெட்டியில் அதிக கூட்டம்.. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மது போதை ஆசாமி..!

தமிழகத்தில் ஏப்ரல் 15 வரை மலையேற்றத்துக்கு தடை! வனத்துறை முடிவுக்கு என்ன காரணம்?

முதல்முறையாக ஒரு கிராம் ரூ.8000ஐ தாண்டியது தங்கம் விலை.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments