Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் மோடியின் வாகனப் பேரணியில் விதிமீறல்.! போலீசார் வழக்குப்பதிவு..!!

Senthil Velan
வியாழன், 11 ஏப்ரல் 2024 (17:27 IST)
சென்னையில் பிரதமர் மோடியின் வாகன பேரணியின் போது சாலைகளில் எவ்வித அனுமதியும் இன்றி விளம்பரப் பதாகைகள் வைத்ததாக கொடுத்த புகாரின் பேரில் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்த நரேந்திர மோடி நேற்று சென்னை தி.நகரில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
 
திநகரில் பிரதமர் மோடியை வரவேற்று சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான தொண்டர்கள் கோஷமிட்ட நிலையில் சாலையில் விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டது.
இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட படியே பிரதமர் மோடி பயணித்தார்.
 
சாலைகளில் எவ்வித அனுமதியும் இன்றி விளம்பரப் பதாகைகள் வைத்ததாக தேர்தல் அதிகாரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாண்டி பஜார் மற்றும் மாம்பலம் ஆகிய காவல் நிலையங்களில் தேர்தல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ALSO READ: ரூ.3,300 கோடியை உடனே திருப்பிச் செலுத்துங்கள்..! அனில் அம்பானிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!!
 
சாலையில் அத்துமீறி இந்த பேனர்களை வைத்தது யார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடியில் உள்ள நிறம், யானை, வாகை மலருக்கு விளக்கம் அளித்த தவெக தலைவர் விஜய்..!

தவெகவின் 5 கொள்கை தலைவர்கள் இவர்கள் தான்.. விஜய் அறிவிப்பு..!

தவெக மாநாடு: பெரியார் வேணும்.. கடவுள் மறுப்பு வேணாம்! - பெரியார் கொள்கை குறித்து விஜய் பேச்சு!

தமிழக வெற்றி கழகம் என்ற பெயர் எதனால்? விஜய் பேச்சு

மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments