Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

`தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை'' -பிரதமர் மோடி

PM Modi

SInoj

, புதன், 10 ஏப்ரல் 2024 (16:38 IST)
பாராளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு அனைத்து கட்சிகளும் தீவிரப் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த நிலையில்,  கோவை மேட்டுப்பாளையத்தில் நடந்த பாஜக பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் போட்டியிடும் கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய தொகுதி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, இன்று பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.
 
அப்போது அவர் பேசியதாவது:
 
திமுக தன்னுடைய சுய லாபத்திற்காக தமிழகத்திற்கு அதிகபட்ச கேடுகளை உருவாக்கிக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
 
மேலும், தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை. எதாவது பொய் சொல்லி அரசு அதிகாரத்தில் இருப்பதே திமுக, காங்கிரஸின் நோக்கமாகவுள்ளது.  எங்களுடையெ அரசு 25 கோடி ஏழை மக்களை வறுகைக்கோட்டையில் இருந்து மீட்டுள்ளது. திராவிட கட்சிகள் இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்தும் தமிழகத்தில் வறுமை ஒழியவில்லை என்று விமர்சித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழகத்தில் பிறக்காத மறத் தமிழன் பிரதமர் மோடி..! அண்ணாமலை...