Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேமுதிக வேட்பாளருக்கு ஆதரவாக விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (21:07 IST)
தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , விசிக பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவாக உள்ள நிலையிலும் தனது கட்சியினருக்காகவும் தனது தொண்டர்களுக்காகவும் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி அமமுக கூட்டணியில் 60 தொகுதிகளில் போட்டியிடவுள்ள தேமுதிகவுக்கு விஜய்காந்த்தின் பிரசாரம் கைகொடுக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று சென்னை எழும்பூர்  தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரபுவை ஆதரித்து விஜயகாந்த் வாக்கு சேகரித்தார். சேத்துப்பாக்கத்தில் வாகனத்தில் அமர்ந்து கையை மட்டும் தூக்கி வாக்குகள் சேகரித்தார். மேலும் இதேபோல் திருவிக தொகுதி வேட்பாளர் எம்பி சேகர், வில்லிவாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சுபமங்கலம் டில்லிபா ஆகியோருக்கு ஆதரவாக விஜயகாந்த் வாக்குகள் சேகரித்தார். இத்னால் கட்சித் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

ரிசல்ட்டுக்கு முன்பாக தமிழகம் வரும் பிரதமர் மோடி! குமரியில் தியானத்தில் ஆழ்கிறார்?

அரசு வேலை வாங்கித் தருகிறேன்.! தாசில்தார் என கூறி பல லட்சம் மோசடி.! கார் ஓட்டுநர் கைது..!!

காதலிக்கு இறுதிச்சடங்கு செய்ய காசில்லை.. பிணத்தை சாலையில் போட்டு சென்ற லிவ்-இன் காதலன்!

ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் மனு ஒத்திவைப்பு..! மே 30-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம்..!

சவுக்கு சங்கரை போல் பிரகாஷ்ராஜை கைது செய்ய வேண்டும்: நாராயணன் திருப்பதி..!

அடுத்த கட்டுரையில்