Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜயலட்சுமி வழக்கு! சீமானுக்கு நாளை வரை கெடு! இல்லாவிட்டால் கைது? - சம்மனை கிழித்த நாதக!

Prasanth Karthick
வியாழன், 27 பிப்ரவரி 2025 (13:34 IST)

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி தொடுத்த வழக்கில் சீமான் ஆஜராக நாளை வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.

 

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரான சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி உறவு வைத்துக் கொண்டதுடன், பலமுறை கருக்கலைப்பும் செய்யப்பட்டுள்ளதாக நடிகை விஜயலட்சுமி சீமான் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையில் இன்று சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டுமென சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

 

அவர் ஆஜராகாத நிலையில் அவர் ஆஜராக 4 வார கால அவகாசம் கேட்டு அவரது வழக்கறிஞர் கடிதம் அனுப்பியிருந்தார். இந்நிலையில் சீமான் நாளை காலை 11 மணிக்கு சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்றும், விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரும் எனவும் காவல்துறை சீமான் வீட்டிற்கு சம்மன் அனுப்பி சுவற்றில் ஒட்டியுள்ளனர். ஆனால் அதை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கிழித்து எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜயலட்சுமி வழக்கு! சீமானுக்கு நாளை வரை கெடு! இல்லாவிட்டால் கைது? - சம்மனை கிழித்த நாதக!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது.. அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு..!

எங்கே தமிழ்? சென்னை பேருந்துகளின் குறிப்பேடு ஆங்கிலத்தில் மாற்றம்: அன்புமணி கேள்வி

நாய் வளர்க்க ரூ.750, மாடு வளர்க்க ரூ500..? செல்லப்பிராணிகளுக்கு கட்டணம்!! - மாநகராட்சி முடிவால் மக்கள் அதிர்ச்சி!

ரூ.3.47 கோடி அமெரிக்க டாலர்களை மாணவிகள் கடத்தினார்களா? 2 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments