Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஃபெஞ்சல் புயலால் பாதிப்பு: இன்று நிவாரணம் வழங்குகிறார் தவெக தலைவர் விஜய்..!

Siva
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (12:08 IST)
ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நிவாரணம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு காரணமாக ஃபெஞ்சல் புயல் தோன்றிய நிலையில் இந்த புயல் கடந்த 30ஆம் தேதி புதுவை அருகே கரை கடந்தது என்பதும் இந்த புயல் காரணமாக பெய்த கனமழையால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு விழுப்புரம் உட்பட சில மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கி வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது பனையூர் அலுவலகத்தில் நிவாரணம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை டிபி சத்திரம் பகுதி மக்களுக்கு இன்று விஜய் நிவாரணம் வழங்கிறார் என்றும், சுமார் 300 குடும்பங்களை நேரில் பனையூர் வரவழைத்து மழை நிவாரண உதவிகளை அவர் வழங்க இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானை இந்தியா கைப்பற்றும் லாகூர் ‘லவ் நகர்’ ஆகும்.. கராச்சி ‘நியூ காசி’ ஆகும்: மார்க்கண்டேய கட்சு

விடிய விடிய பாகிஸ்தான் நடத்திய ட்ரோன் தாக்குதல்.. பதுங்கு குழியில் ஜம்மு மக்கள்..!

நிதி கொடுத்து உதவுங்கள்.. உலக வங்கியிடம் கெஞ்சும் பாகிஸ்தான் அரசு..!

அடுத்த அட்டாக் ஆரம்பமா? 26 போர்க்கப்பல்கள் தயார் நிலையில் இருக்க உத்தரவு

பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை தடுத்த இந்திய ராணுவம்.. வீடியோ வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments