Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: லெபனான் நாட்டில் 11 பேர் பலி..!

Mahendran
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (11:57 IST)
இஸ்ரேல் மற்றும் லெபனான் நாடுகளிடையே சமீபத்தில் போர் நிறுத்தம் ஏற்பட்டதை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையிலான பிரச்சனை ஓய்ந்தது என்று கூறப்பட்டது.

ஆனால் தற்போது போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி இருப்பதை அடுத்து இந்த தாக்குதலில் பதினோரு பேர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் புதன்கிழமை இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பிலேயே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து தாக்குதல்கள் நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் லெபனான், சிரியா நாடுகளின் எல்லைகளில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் 11 பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் போர் நிறுத்த ஒப்பந்தத்தை முதலில் மீறியது ஹிஸ்புல்லா தான் என்றும் இந்த அமைப்பு நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தான் லெபனான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறியிருக்கின்றது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் அழைப்பு விடுத்த பாஜக.. முடியாது என நிராகரித்த ஓபிஎஸ்..!

முன்னாள் துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் எங்கே? அமித்ஷாவுக்கு பறந்த கடிதத்தால் பரபரப்பு..!

காசாவில் நாளையே போரை முடிச்சிடலாம்.. அதுக்கு இதை செஞ்சாகணும்! - இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு!

காலை முதலே டெல்டாவை குறி வைத்த மழை! இன்று எங்கெல்லாம் மழை? - வானிலை ஆய்வு மையம்!

கேள்விக்குறியாகும் டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு: ஹைதராபாத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம்

அடுத்த கட்டுரையில்
Show comments