Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: விழுப்புரம் பகுதியில் அண்ணாமலை நேரில் ஆய்வு..!

Advertiesment
Annamalai

Mahendran

, செவ்வாய், 3 டிசம்பர் 2024 (11:49 IST)
விழுப்புரம் மாவட்டத்தில் கேன்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அண்ணாமலை நேரில் ஆய்வு செய்ததாகவும் அந்த பகுதி மக்களிடம் நேரில் அவர் குறைகளை கேட்டு அறிந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

வங்க கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மையம் கேன்சல் புயலாக மாறி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவண்ணாமலை மற்றும் புதுவை ஆகிய பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் கடந்த பின்னரும் இந்த பகுதிகளில் கன மழை பெய்து வருவதாகவும் இதனால் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்த நிலையில் தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு செய்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் ஆய்வு செய்ததாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டு அறிந்ததாகவும் தருகிறது. மேலும், உப்பளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ.238 கோடி அபராதம்.. இதுக்கு தான் 70 மணி நேரம் வேலை செய்ய சொன்னாரா?