Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? திருமாவளவன் விளக்கம்..!

Mahendran
வெள்ளி, 8 மார்ச் 2024 (15:10 IST)
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகள் கேட்டதாகவும் அதில் ஒரு தொகுதி பொது தொகுதி என்றும் மூன்று தொகுதிகளிலும் தங்கள் கட்சியின் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் இன்று திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே நடந்த ஒப்பந்தத்தில் இரண்டு தனி தொகுதிகளான விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகள் மற்றும் பெற்றுக் கொண்டு திருமாவளவன் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்த போது ’அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் கூட்டணி கட்டுகோப்பாக இயங்கி ஒட்டுமொத்த வெற்றியும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு தனித் தொகுதியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சியை உடன்பாடு தெரிவித்திருக்கிறது

திமுக எங்களுக்கு தொகுதியை கொடுத்தது என்பதை விட நாங்கள் அனைவரும் சேர்ந்து தொகுதியை பகிர்ந்து கொண்டோம் என்பதுதான் எதார்த்தமான உண்மை. மன நிறைவோடு இந்த ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆப்பிள் ஸ்டோரை சூறையாடிய போராட்டக்காரர்கள்.. லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டம் என்ற பெயரில் வன்முறை..!

டெல்லி சிறப்பாக செயல்படுகிறது.. இனி டெல்லியை நாங்கள் பின்பற்றுவோம்: துணை முதல்வர் டிகே சிவகுமார்

சட்டவிரோதமாக நுழைந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம்! - இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை.. குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டு பிடித்த போலீஸ்..!

மனுஷங்க ஒட்டு கேக்குறாங்க..! திடீரென ரகசிய பாஷையில் பேசிக் கொண்ட AI Models! - அதிர்ச்சியில் டெவலப்பர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments