Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 தொகுதிகளுக்கு ஒப்புக்கொண்டது ஏன்? திருமாவளவன் விளக்கம்..!

Mahendran
வெள்ளி, 8 மார்ச் 2024 (15:10 IST)
திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மூன்று தொகுதிகள் கேட்டதாகவும் அதில் ஒரு தொகுதி பொது தொகுதி என்றும் மூன்று தொகுதிகளிலும் தங்கள் கட்சியின் சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று நிபந்தனை விதித்ததாகவும் கூறப்பட்டது.

ஆனால் இன்று திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடையே நடந்த ஒப்பந்தத்தில் இரண்டு தனி தொகுதிகளான விழுப்புரம் மற்றும் சிதம்பரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகள் மற்றும் பெற்றுக் கொண்டு திருமாவளவன் கையெழுத்திட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் இது குறித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்த போது ’அரசியல் சூழலை கருத்தில் கொண்டு கடந்த தேர்தலை போலவே இந்த தேர்தலிலும் கூட்டணி கட்டுகோப்பாக இயங்கி ஒட்டுமொத்த வெற்றியும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இரண்டு தனித் தொகுதியில் போட்டியிட விடுதலை சிறுத்தைகள் கட்சியை உடன்பாடு தெரிவித்திருக்கிறது

திமுக எங்களுக்கு தொகுதியை கொடுத்தது என்பதை விட நாங்கள் அனைவரும் சேர்ந்து தொகுதியை பகிர்ந்து கொண்டோம் என்பதுதான் எதார்த்தமான உண்மை. மன நிறைவோடு இந்த ஒப்பந்தத்திற்கு கையெழுத்திட்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments