Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஃபரூக் அப்துல்லா எங்கே?” உச்சநீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு தாக்கல்

Arun Prasath
புதன், 11 செப்டம்பர் 2019 (12:27 IST)
ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு, வைகோ ஆட்கொணர்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை தொடர்ந்து காஷ்மீரின் பலகட்சிகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இவர்களுடன் காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா வீட்டுச் சிறையில் வைக்கப்படவில்லை என உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்நிலையில் ஃபரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தருமாறு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், ”வருகிற 15 ஆம் தேதி நடைபெறும் அண்ணா மாநாட்டிற்கு, பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஃபரூக் அப்துல்லாவை அழைக்க முடியவில்லை, அவர் எங்கே என்று தெரியவில்லை, எனவே அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என வைகோ கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சென்னை மண்ணடி காளிகாம்பாள் கோவில் அர்ச்சகருக்கு லுக் அவுட் நோட்டீஸ்.. என்ன காரணம்?

தனுஷ்கோடிக்கு செல்ல தடை.. ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் சுற்றுலா பயணிகள்

2024–25-ம் கல்வியாண்டில் சிபிஎஸ்இ-யில் தமிழ் பாட தேர்வு கட்டாயம்: பள்ளி கல்வித்துறை தகவல்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி: 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

அந்த பத்து பேருக்கு.. பங்கம் செய்தார் அண்ணாமலை.. நடிகை கஸ்தூரி ட்விட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments