Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேரோடு அல்ல வேரடி மண்ணோடும் சாய்ப்போம்: இந்தி ஆதிக்கத்தால் கொதித்த வைகோ!

Webdunia
திங்கள், 10 ஆகஸ்ட் 2020 (11:21 IST)
கனிமொழியை இந்தியரா என கேட்டதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 
 
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பல கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பதான பிம்பம் கட்டமைக்கப்படுகிறதா என்பது குறித்து எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “இன்று விமான நிலையத்தில் எனக்கு இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவரிடம் கேட்டேன். அதற்கு அவர் நீங்கள் இந்தியர்தானே என திரும்ப கேட்டார். இந்தி பேசினால்தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது என தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பலர் இதற்கு குரல் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் வைகோ, இந்தி ஆதிக்கத்தை நிலைநிறுத்த முயன்றால் அடிமுதல் நுனி வரை வேரோடும் வேரடி மண்ணோடும் சாய்ப்போம் என கூறியுள்ளார். 
 
அதோடு எம்.பி. தயாநிதி மாறன், விமான நிலையத்தில் கனிமொழிக்கு நடந்த சம்பவம் தொடர்பாக உரிய இடத்தில் புகாரளிப்போம். அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களையே விமான நிலையங்களில் பணியமர்த்த வேண்டும் எனவும் கோரியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

பதவியேற்பின்போது பாலஸ்தீனத்தை ஆதரித்து முழக்கம்.. ஒவைசி தகுதி நீக்கம் செய்யப்படுகிறாரா?

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் தலைமறைவு.. என்ன நடந்தது?

வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தடுக்க கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு..!

திமுகவும் இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளது: முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments