Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்தி தெரிந்தால்தான் இந்தியரா? – ஏர்போர்ட் சம்பவம் குறித்து கனிமொழி எம்.பி!

Advertiesment
Tamilnadu
, ஞாயிறு, 9 ஆகஸ்ட் 2020 (15:08 IST)
விமான நிலையத்தில் இந்தி தெரியாது என்றதால் அதிகாரி ஒருவர் நீங்க இந்தியரா என கேள்வியெழுப்பியதாக கனிமொழி தனது அனுபவத்தை கூறியுள்ளார்.

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக பல கட்சியினரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்பதான பிம்பம் கட்டமைக்கப்படுகிறதா என்பது குறித்து எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் “இன்று விமான நிலையத்தில் எனக்கு இந்தி தெரியாததால் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் பேசும்படி சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரி ஒருவரிடம் கேட்டான். அதற்கு அவர் நீங்கள் இந்தியர்தானே என திரும்ப கேட்டார். இந்தி பேசினால்தான் இந்தியர் என்று எப்போது முடிவு செய்யப்பட்டது என தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என கேள்விஎழுப்பியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் அதிருப்தியில் இல்லை, பிரதமரை பாக்கவும் இல்லை! – திமுக எம்.பி தடாலடி விளக்கம்!