Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தடுப்பூசி கையிருப்பு உள்ளது - அமைச்சர் தகவல்

Webdunia
திங்கள், 28 ஜூன் 2021 (16:27 IST)
இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண் அமைச்சர் மா. சுப்ரமணியம்,  தமிழக மக்கள் தடுப்பூசி செலுத்த தயாராக இருப்பதாகவும்  கையிருப்பாக 2 லட்சம் தடுப்பூசிகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகம்  முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு துரிதமாக தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று ஒரு நிகழ்ச்சியில்  கலந்துகொண்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமனியம் பேசியதாவது:

‘தமிழ்நாடே தடுப்பூசி போட்டுக்கொள்ள தயாராக உள்ளது. ஆனால் தடுப்பூசிதான் இல்லை. 1.44 கோடி தடுப்பூசிகள் வந்துள்ளன. இதுவரை 1.41 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. கையிருப்பு 2 லட்சம் தடுப்பூசிகள் உள்ளன. அதுவும் இன்றுக்குள் முடிந்துவிடும்’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  தமிழகத்திற்கு வரும் ஜூலை மாதம் 71 லட்சம் தடுப்பூசிகள் தருவதாக மத்திய அரசு கூறியுள்ளதாகவும், கொரோனா இரண்டாவது அலையில் 69,000 படுக்கைகள் தயாராக உள்ளதாகவும், கூதலாக ஆஜ்ஸிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments