Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா புறப்பட ரெடியா? 8 லட்சம் விசாக்கள் தயார்! – சென்னை தூதரகம் தகவல்!

Webdunia
புதன், 20 ஏப்ரல் 2022 (08:54 IST)
கொரோனா காரணமாக அமெரிக்கா செல்ல விசா அளிப்பது தடைப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிற்காக பல ஆயிரம் மக்கள் அமெரிக்கா செல்வது வழக்கமாக உள்ளது. கொரோனாவிற்கு முந்தைய காலத்தில் ஆண்டுக்கு 12 லட்சம் விசாக்கள் வழங்கப்பட்டு வந்த நிலையில் கொரோனாவால் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்நிலையில் சென்னையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அமெரிக்க தூதரக விவகாரங்கள் ஆலோசகர் டொனால்டு ஹப்ளின், அமெரிக்கா செல்ல இந்த ஆண்டு 8 லட்சம் விசாக்கள் வழங்கப்பட உள்ளதாகவும், ஐடி கம்பெனிகள் மூலம் அமெரிக்கா செல்பவர்களுக்கு செப்டம்பர் மாதம் முதலாகவும், மாணவர்களுக்கு மே மாதம் முதலாகவும் நேர்க்காணல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ்மாக் மதுபானம் குறித்து அமைச்சர் துரைமுருகன் கூறும் கருத்து உண்மைதான்.. அண்ணாமலை

அதிமுக பிரமுகர் கொலை.. ஆடு விற்பனை தொடர்பான முன்பகையா? 3 பேர் கைது

பீகாரை தொடர்ந்து ஜார்கண்டிலும் இடிந்து விழும் பாலங்கள்! மக்கள் அதிர்ச்சி!

பிளக்ஸ் போர்டு வைக்கும் போது மின்சாரம் தாக்கி 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. திருவாரூரில் அதிர்ச்சி..!

சென்னையில் 11 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம்.. அடிபம்பிற்கு பூட்டு போட்டதால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments