Webdunia - Bharat's app for daily news and videos

Install App

U-Turn அடித்த அதிமுக அரசு; மடக்கி பிடித்த உதயநிதி!!

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (11:23 IST)
பள்ளிக்கல்வித்துறை மாற்றி மாற்றி அறிவிப்பு செய்து மாணவர்கள் மீது மனோரீதியான தாக்குதல் நடத்துகிறது என உதயநிதி விமர்சனம்.
 
தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தது. இதனைத்தொடர்ந்து திடீரென அக்டோபர் 1 முதல் பள்ளிக்கு செல்லலாம் என்று வெளியான அரசாணை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் இது குறித்து உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், அக்.1 முதல் பள்ளிகள் திறப்பென அறிவித்த அடிமை அரசு திறக்கவில்லை என்று மீண்டுமொரு U-Turn அடித்துள்ளது. அம்மையார் காலத்தில் பள்ளிக்கல்வி அமைச்சர்கள்தான் தூக்கியடிக்கப்பட்டனர். அடிமை அரசோ பள்ளிக்கல்வித்துறையையே பந்தாடுகிறது. கற்றறிந்த அதிகாரிகளாவது மாணவர் எதிர்காலம் காக்க வேண்டும்.
 
பொய் சொல்லக்கூடாது-மாற்றி பேசக்கூடாது என்பது பாலபாடம். ஆனால் பள்ளிக்கல்வித்துறையே மாற்றி மாற்றி அறிவிப்பு செய்து மாணவர்கள் மீது மனோரீதியான தாக்குதல் நடத்துகிறது என விமர்சனம் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments