Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவெக கொடியை ஏற்றக்கூடாது: தொண்டர்களுக்கு தலைமை கடும் எச்சரிக்கை..!

Siva
ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2024 (13:41 IST)
அனுமதி இல்லாமல் தமிழக வெற்றி கழகத்தின் கொடியை ஏற்ற கூடாது என தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை கடந்த சில மாதங்களுக்கு முன் விஜய் தொடங்கிய நிலையில் சமீபத்தில் இந்த கட்சியின் கொடியை அவர் அறிமுகம் செய்தார். இரண்டு போர் யானைகள் மற்றும் வாகை மலருடன் கூடிய இந்த கொடி கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகத்தின் கட்சியின் கொடி ஏற்றப்பட்டு வரும் நிலையில் மதுரையில் 50 அடி உயரத்தில் கொடிக்கம்பம் நட்டி  கொடியேற்ற அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைமை இது குறித்து கூறிய போது அனுமதி இன்றி எங்கும் கொடியேற்றக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எச்சரிக்கையை மீறும் கட்சி நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கட்சியின் தலைமை கூறியுள்ளதால் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments