Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலா வருகை எப்படி இருக்க வேண்டும்: விஸ்வாசிகளுக்கு டிடிவி அறிவுரை!!

Webdunia
புதன், 3 பிப்ரவரி 2021 (11:30 IST)
சசிகலாவின் வருகையின் போது தொண்டர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என டிடிவி தினகரன் அறிவுரை வழங்கியுள்ளார்.

 
டிடிவி தினகரன் கூறியதாவது, சசிகலாவின் வருகையின் போது அம்மாவின் உண்மை தொண்டர்கள் ராணுவ வீரர்கள் போன்று அணிவகுத்து நிற்க வேண்டும். தமிழக எல்லையிலிருந்து அம்மா வீடு வந்து சேரும் வரை வழிநெடுகளிலும் வரவேற்கலாம்.
 
சசிகலாவை வரவேற்கும் போது கழகத்தினரால் யாருக்கும் இடையூறு ஏற்படக்கூடாது. சசிகலா வருகிறார் என்கிற போதே ரசாயன மாற்றம் நிகழ்வதை காண முடிகிறது. யார் தவறு செய்தவர்கள் யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள். 
 
தமிழ்நாட்டில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவோம். அஇஅதிமுகவை மீட்டு எடுப்பதற்காகத்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம். ஜனநாயக ரீதியாக போராடி மக்கள் ஆதரவை பெற்று வெற்றி பெறுவோம் என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments