Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் மேலும் 72 பேர்களுக்கு கொரோனா: சென்னையில் மட்டும் 52 பேர்

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (18:23 IST)
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தினமும் சுகாதாரத்துறை தெரிவித்து வரும் நிலையில் சற்று முன் 72 பேர்கள் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 1755 பேர்களுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
மேலும் சென்னையில் இதுவரை 400 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மட்டும் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் மொத்தம் 452 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இன்று இருவர் கொரோனாவால் உயிரிழந்ததை அடுத்து தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் இன்று தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 114 பேர் குணமாகி உள்ளதாகவும் இதனை அடுத்து 866 பேர் கொரோனா நோயிலிருந்து குணம் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments