Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவண்ணாமலை கார்த்திகை தீப விழா: மலையேறும் பக்தர்களுக்கு நெறிமுறைகள்..!

Webdunia
செவ்வாய், 21 நவம்பர் 2023 (17:16 IST)
திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா 26 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் மலையேறும் பக்தர்களுக்கு சில நிபந்தனைகளுடன் நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 தீபத் திருவிழா தினத்தன்று  திருவண்ணாமலை அரசு கல்லூரி வளாகத்தில் சிறப்பு மையம் திறக்கப்பட்டு முதலில் வரும் 2500 பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்தவர்கள் அதிகபட்சம் 60 வயது உள்ளவர்கள் மட்டுமே மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மலையேறும் பக்தர்கள் தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை உள்ளிட்ட  ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொடுத்து அனுமதி சீட்டு பெற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் மலையேறும் பக்தர்கள் தண்ணீர் பாட்டில் மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும் என்றும்  காலி தண்ணீர் பாட்டில்களை திருப்பிக் கொண்டு வர வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் கற்பூரம் உள்ளிட்ட எளிதில் தீ பிடிக்கக்கூடிய பொருட்களை மலைக்கு கொண்டு செல்லக்கூடாது என்றும்  கொண்டு செல்லும் நெய்யினை கொப்பரையில் மட்டுமே ஊற்ற வேண்டும் என்றும் வேறு இடத்தில் ஊற்றக்கூடாது என்றும் தீபம் ஏற்ற கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments