Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் வெல்லப்போவது யார்? எக்சிட்போல் முடிவுகள்

Webdunia
ஞாயிறு, 19 மே 2019 (19:02 IST)
இந்திய அளவில் நடத்தப்பட்ட தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக எக்சிட்போல் முடிவுகள் தெரிவித்து வரும் நிலையில் தமிழகத்தை பொருத்தவரை திமுக கூட்டணி அதிக இடங்களை பெறும் என எக்சிட்போல் தெரிவித்துள்ளது.
 
அதாவது திமுக கூட்டணி 22 முதல் 24 தொகுதிகள் வரையும், அதிமுக கூட்டணி 14 முதல் 16 தொகுதிகள் வரையும் பெற வாய்ப்பு இருப்பதாகவும், அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்றும் நியூஸ்18 எக்சிட்போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. 20 தொகுதிகளில் போட்டியிட்ட திமுக 12-14 தொகுதிகளிலும், 10 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் 3-5 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அதிமுக 8-10 தொகுதிகளிலும், பா.ஜ.க 1-2 தொகுதிகளிலும், பா.ம.க 2-4 தொகுதிகளிலும், தே.மு.தி.க 1-2 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கருத்து கணிப்பில் தெரியவருகிறது.
 
ஆனால் டைம்ஸ் நவ் எக்சிட்போல் முடிவுகளில் திமுக கூட்டணி 23 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 16 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதிகள் குறித்த கருத்துக்கணிப்பு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments