Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக சட்டமன்ற தேர்தல்; மக்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (08:39 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் வாக்களிக்க சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெளியூரில் உள்ள மக்கள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி சென்னையில் இருந்து தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கும் ஏப்ரல் 1 முதல் 5 வரை 5 நாட்களுக்கு 2,225 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதவிர மற்ற நகரங்களில் இருந்து 3,090 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. இந்த பேருந்துகளில் முன்பதிவு செய்ய www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் அல்லது சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்திலும் முன்பதிவு செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முஸ்லீம் நாட்டுடன் 12 முக்கிய ஒப்பந்தத்தை செய்த இந்தியா.. பாகிஸ்தான், துருக்கி அதிர்ச்சி..!

இந்தியா எங்கள் நட்பு நாடு.. இடைக்கால அதிபருக்கு எதிரான கருத்தை வெளியிட்ட வங்கதேச ராணுவ தளபதி..!

பாகிஸ்தான் - பங்களாதேஷ் பார்டருக்கு சென்றாரா யூடியூபர் ஜோதி? உள்துறை செயலாளர் திடுக் தகவல்..!

இந்தியாவை முந்தியது வங்கதேசம்.. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங் சேவை தொடக்கம்..!

துணை முதல்வர் பதவி, ஆட்சியில் அதிகாரம் கேட்பதில் தவறில்லை: கார்த்தி சிதம்பரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments