Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வள்ளுவரை அவமதிப்பதா? டிவிட்டரில் பொங்கிய பாஜக!

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (18:21 IST)
திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்த கோழைகளை அரடு இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும் என பாஜக டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. 
 
தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலை மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் சாணியை பூசிவிட்டு சென்றனர். இந்த விவகாரம் கடும் எதிர்ப்புகளை சம்பாதித்த நிலையில், இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். 
 
இந்நிலையில் தமிழக பாஜக தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில்,
குன்றன்னார் குன்ற மதிப்பிற் குடியொடு 
நின்றன்னார் மாய்வர் நிலத்து
 
யுகங்கள் கடந்து வாழும் வள்ளுவருக்கு தீங்கிழைத்து ஆதாயம் தேடுவோர், எப்பெரும் மனிதராய் இருந்தாலும் குடியோடு அழிவர் என குறிப்பிட்டு. 
 
திருவள்ளுவர் சிலையை அவமரியாதை செய்த கோழைகளை அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments