Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு மீண்டும் மழை! சென்னைக்கு எப்படி??

Webdunia
திங்கள், 4 நவம்பர் 2019 (17:09 IST)
வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
கடந்த சில தினகங்களுக்கு முன்னர் க்யார் என்னும் புயல் உருவாகியிருந்த நிலையில், அதனைத்தொடர்ந்து கேரளாவிலிருந்து 300 கிமி தொலைவில் மஹா புயல் உருவானது. இந்த மழை தமிழகத்திற்கு எந்த பாதிப்பையும் உருவாக்காவிட்டாலும் மழையை கொடுத்தது. 
 
இதன் பின்னர் கடந்த இரு தினகங்களாக சென்னையில் நல்ல வெயில் அடித்து வருகிறது. இந்நிலையில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
அதேபோல  காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மீனவர்கள்4, 5 ஆம் தேதிகளில் அந்தமான் கடல் பகுதிக்கும், 6, 7, 8 ஆம் தேதிகளில் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துளது. 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments