Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய்யா.. பெட்ரோல், டீசல் வாங்க லோன் குடுங்க! – வங்கி முன்னால் திரண்ட இளைஞர்கள்!

Webdunia
வியாழன், 25 பிப்ரவரி 2021 (13:28 IST)
நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல் வாங்க லோன் கேட்டு இளைஞர்கள் மனு கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்த நிலையில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ எட்டியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை தொடர்ந்து சமையல் கேஸ் சிலிண்டரும் விலை உயர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் எழுந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தேனி அல்லிநகர இளைஞர்கள் பெட்ரோல் வாங்க கடனுதவி செய்ய வேண்டும் என வங்கியில் மனு அளித்துள்ளனர். கல்விக்கடன், வீட்டுக்கடன் வழங்குவது போல பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் போன்றவற்றை வாங்கவும் வங்கிக்கடன் வழங்க வேண்டும் என்ற நூதனமான கோரிக்கையினை அவர்கள் விடுத்துள்ளது வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments