Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

Prasanth Karthick
ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (18:45 IST)

தமிழகத்தில் ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தமிழ்நாட்டில் இன்னும் வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையிலும் பல பகுதிகளிலும் தொடர்ந்து நல்ல மழை அவ்வபோது பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிதமான அளவில் மழை பெய்து நிலத்தை குளிர்வித்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 

தற்போது செப்டம்பரிலும் பல பகுதிகளில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியுள்ள நிலையில் இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி இன்று இரவில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழைப்பொழிவுக்கு வாய்ப்புள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா சாலைக்கு தனியாக வர தயார்.. எப்போது வரவேண்டும்: பதில் சவால் விடுத்த அண்ணாமலை

அண்ணாமலையின் பேச்சு அநாகரீத்தின் உச்சம்: அமைச்சர் மா சுப்பிரமணியன் கண்டனம்..!

Get out Modi? Get Out Stalin? எது ட்ரெண்டாகும்? எக்ஸ் தளத்தில் இப்போதே தொடங்கிய ஹேஷ்டேக் மோதல்!

ஆர்.எஸ்.பாரதி ஒரு ஞாயிற்றுக்கிழமை வக்கீல். கோர்ட்டுக்கு போகாதவர்: கராத்தே தியாகராஜன்

ரயில் இன்ஜின் டிரைவர்கள் இளநீர் குடிக்க கூடாதா? தென்னக ரயில்வே உத்தரவுக்கு என்ன காரணம் ?

அடுத்த கட்டுரையில்
Show comments