Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (20:56 IST)
முதலமைச்சர் வீட்டிற்கு  வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  பரோட்டா மாஸ்டரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்றிரவு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு முதல்வர் ஸ்டாலின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறிவிட்டு போனை வைத்துள்ளார்.

இதனையடுத்து தேனாம்பேட்டையிலுள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்தது பொய் என தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், வண்டலூர் அருகே பரோட்டா மாஸ்டராகப் பணிபுரியும் பழனிவேல் மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.  போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜ்யசபா தேர்தல்.. 4 எம்பி சீட்டுக்கு 6 பேர் போட்டி.. கமல்ஹாசனுக்கு கிடைக்குமா?

சிபிஐக்கு மாற்றப்பட்டது தாது மணல் வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

ஒரு கேலிச்சித்திரத்தை நாடே புரிந்துகொள்ளும்படி செய்தது விகடன்: கமல்ஹாசன்

2 வாரங்களாக கரடியின் பிடியில் பங்குச்சந்தை.. காளையின் பிடிக்கு செல்வது எப்போது?

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments