Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படிக்காமல் டிவி பார்த்த குழந்தையை அடித்து கொன்ற தாய் - திருச்சியில் சோக சம்பவம்

Webdunia
செவ்வாய், 21 மே 2019 (11:47 IST)
படிக்காமல் டிவி பார்த்த காரணத்திற்காக பெண் குழந்தையை அதன் அம்மாவே அடித்து கொன்ற சம்பவம் திருச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
திருச்சி அருகே உள்ள காட்டுப்புதூரை சேர்ந்தவர் பாண்டியன். தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைபார்க்கும் இவருக்கு நித்யகமலா என்ற மனைவியும், லத்திகாஸ்ரீ என்ற 5 வயது மகளும் இருக்கின்றனர். லத்திகாஸ்ரீ ஒரு பள்ளியில் எல்கேஜி வகுப்பில் படித்து கொண்டிருந்திருக்கிறார்.
 
சம்பவத்தன்று லத்திகாஸ்ரீ படிக்காமல் டிவி பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அவர் சரியாக படிப்பதில்லை, எப்போதும் டிவி பார்த்து கொண்டே இருக்கிறார் என கோபம் கொண்ட நித்யகமலா லத்திகாவை சராமாரியாக அடித்துள்ளார் என தெரிகிறது. இதில் பலத்த காயங்களுக்குள்ளான லத்திகாஸ்ரீயை உடனடியாக அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு போதிய வசதி இல்லாததால் நாமக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்திருக்கிறார்கள். ஆனாலும் லத்திகாவின் உடல்நிலை தொடர்ந்து மோசமாகி கொண்டே போனதால் சேலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அந்த பிஞ்சு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
 
பெற்ற தாயே தன் குழந்தையை அடித்து கொன்ற சம்பவம் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து நித்யகமலாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments